தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் என்றே கூறலாம்.
தற்போது பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் “லவ் இன்சூரன்ஸ் கம்பனி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா,கிர்த்தி ஷெட்டி, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பதுடன் செவன் ஸ்கிறீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
லவ் இன்சூரன்ஸ் கம்பனி திரைப்படம் செப்டம்பர் 18 திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். தற்போது தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தீபாவளி தினத்தன்று பிரதீப்பின் மற்றொரு படமான “DUET ” வெளியாகவுள்ளது.
