கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வாகனமொன்றை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில், சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனமொன்றைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தலா 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
