துருக்கி தலைநகர் அங்காராவில் தீ விபத்து ஒன்று பதிவாகியுள்ளது. இவ்விபத்தானது அங்காராவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏட்பட்டுள்ளது.
இக்குடியிருப்பில் 20 குடும்பங்கள் வசிப்பதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதுடன், ஒரு குழந்தை உட்பட மூவர் இதில் உயிரிழந்தனர்.
மேலும் 30 இற்கு மேட்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
