சுகாதாரப் பணியாளர்கள் சைகடெலிக் காளான்களைப் (psilocybin) பயன்படுத்திப் பயிற்சி பெறுவதற்கு ஹெல்த் கனடா (Health Canada) விதித்த தடையை கனடாவின் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியுள்ளது.
ஹெல்த் கனடாவின் இந்த முடிவு நியாயமற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது, கனடாவில் சைகடெலிக் சிகிச்சைகளுக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
96 சுகாதாரப் பணியாளர்கள், தங்களுக்கு சைகடெலிக் காளான்களைப் பயிற்சிப் பகுதியாகப் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.
நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த செவிலியர் நிபுணர் ஜெஃப் டோத் (Jeff Toth) என்பவர் இந்த விண்ணப்பத்தைத் தாக்கல் செய்திருந்தார்.
இருப்பினும், ஹெல்த் கனடா இந்த விண்ணப்பங்களை நிராகரித்தது.
இதை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் விளைவாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சைகடெலிக் காளான்களில் உள்ள சைக்கோஆக்டிவ் (psychoactive) பொருளான சைலோசிபின், கனடாவில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்து மற்றும் பொருட்கள் சட்டத்தின் (Controlled Drugs and Substances Act – CDSA) கீழ் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
