கியூபெக் மாகாணத்தில் போதைப்பொருள் அதிகப்பயன்பாட்டினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
நிலைமை மேலும் மோசமடையலாம் என நிபுணர்கள் தீவிரமாக எச்சரித்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், கியூபெக் மாகாணம் இதுவரை இல்லாத அளவில், போதைப்பொருளை அதிகமாகப் பயன்படுத்தியமை சார்ந்த 645 மரணங்களை பதிவு செய்துள்ளது.
இது மாதத்திற்கு சுமார் 53 மரணங்கள் என்ற அதிர்ச்சியூட்டும் சராசரியைக் காட்டுகிறது.
வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வகையான மரணங்கள் குறைந்து வரும் நிலையில், கியூபெக் அந்த நிலைக்கு நேர்மாறாக எதிர் திசையில் பயணிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
