குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்படட்டு 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 170 ற்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது 242 பேர் பயணத்தினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகள் இருந்துள்ளனர் இதில் இந்தியர்கள் 169 பேரும், பிரிட்டிசை சேர்ந்த 53 பேரும், கனேடியர் 1வரும், போர்த்துகீசியர்கள் 7 பெரும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மதியம் 01.39 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து குறித்த அழைப்பு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மே டே கால் (May day call – விமானப் போக்குவரத்து நடை முறையில் மேடே அழைப்பு என்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு துயர அழைப்பு ஆகும்) எனப்படும் ஆபத்தில் இருப்பதைக் குறிக்கும் அழைப்பு விமான போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளது. உலக அளவில் விமானங்களுக்கும், கப்பல்களுக்கும் ஆபத்துக் காலங்களில் அழைக்கும் குறியீடு ஆகும்.
