அநுராதபுரம் எப்பாவல ரொட்டவெவ காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் நேற்று பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
எப்பாவல, ரொட்டவெவ பகுதியில் வசித்த 55 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறித்த பெண் நேற்று ரொட்டவெவ காட்டுப் பகுதிக்கு கறிவேப்பிலை பறிப்பதற்காக சென்றிருந்தபோது கட்டுத்துவக்கு வெடிப்பில் சிக்கி காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
