வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் பிரம்மாண்ட மேதினக் கூட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பித்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டிருந்ததோடு, நகர் வழியாக கலைமகள் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்று இருந்தது.
குறித்த ஊர்வலத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரட்நாயக்க, கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், செ திலகநாதன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களோடு ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
