ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசு புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், விசா நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக விசா வைத்திருப்பவர்களைக் இலக்காகக் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய விசா விதிகளின்படி, ஆங்கில மொழியறிவுக்கான தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் நாட்டில் தங்கியிருக்கும் கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
போலியான விசா விண்ணப்பங்களைத் தடுப்பதற்கும், கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் கடுமையான பரிசீலனை முறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் நிலவும் வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


