எப்.பி.ஐ பிரதி பணிப்பாளராகவுள்ள டோன் போங்கினோ அடுத்த மாதத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்துள்ளார். இம்முடிவு சிறப்பானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்பு சட்ட அமுலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த போங்கினோ, நியூயோர்க் பொலிஸாகவும், இரகசிய உளவாளியாகவும் வேலை செய்து வந்தார். கடந்த மார்ச் மாதம் எப்.பி.ஐ.யின் பிரதி பணிப்பாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்தப் பதவியை 10 மாதங்களே வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


