ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை எழில் கொஞ்சும் கரிபா ஏரியில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று எதிர்பாராதவிதமாக நடுகடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆரம்பத்தில் 15 பேர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மீட்புப் படையினரின் தீவிர தேடுதலுக்குப் பிறகு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 18 சிறுவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 150 பயணிகள் வரை பயணித்ததாகக் கருதப்படும் இந்த விபத்தில், இதுவரை 77 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள தீவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 27 பேரைக் காணவில்லை என்பதால், ஜிம்பாப்வே காவல்துறையினரும் பேரிடர் மேலாண்மை முகமையினரும் இணைந்து ஏரிப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோர விபத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் நகாவா, இச்சம்பவத்தை நாட்டின் தேசிய பேரிடராக முறைப்படி அறிவித்துள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

