கியூபெக் மாகாணத்தில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 18 வயதான மாணவர் ஒருவருக்கு, பிரெஞ்சு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயில்வதிலிருந்து விலக்கு அளிக்க கல்வி அமைச்சு மறுத்ததைத் தொடர்ந்து, கல்லூரிப் படிப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மாகாணம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பிரெஞ்சு மொழி விலக்கு டைமுறைகளை உடனடியாகச் சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
கியூபெக் மாகாணத்தின் பிரெஞ்சு மொழி பட்டயச் சட்டத்தின் கீழ் (Charter of the French language), கடுமையான கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழிப் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு பெற உரிமை உண்டு.இருப்பினும், இந்த விலக்கைப் பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும்
சிக்கலானதாகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் பெற்றோர்கள், கல்வி வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.
கியூபெக்கில் இத்தகைய மொழி விலக்குக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எந்தவொரு அதிகாரப்பூர்வ சட்ட
நடைமுறையும் (Appeal process) தற்போதைக்கு இல்லை என்பது முக்கிய குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

