Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த மாணவர்: அபராதம் வசூலித்து அதிகாரி மோசடி

ஆகஸ்ட் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர் ஒருவரிடம் டிக்கெட் பரிசோதகர் முறைகேடாக ரூ.7,000 வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே வகாடி பேருந்து நிலையத்திலிருந்து கத்ராஜ் பகுதிக்குச் சென்ற பேருந்தில் பயணித்த அம்மாணவரிடம் பரிசோதகர் டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்கு அம்மாணவர், ஆன்லைன் மூலமாகத் தனது செல்போனில் கட்டணம் செலுத்த முயன்றும் தொழில்நுட்பக் கோளாறால் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்ததற்கான ஆதாரங்களைக் காண்பித்துள்ளார்.

இருப்பினும், அதை ஏற்க மறுத்த பரிசோதகர், டிக்கெட் இல்லாமல் பயணித்ததாகக் கூறி ஆரம்பத்தில் ரூ.13,000 அபராதம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பின்னர் பேரம் பேசித் தொகையை ரூ.10,000 ஆகக் குறைத்து, இறுதியாக ரூ.7,000-ஐ மாணவரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளார்.

வழக்கமாக பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு ரூ.500 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட வேண்டிய நிலையில், இந்தத் தொகையைப் போக்குவரத்து நிர்வாகக் கணக்கிற்கு அனுப்பாமல் தனது சொந்த வங்கிக் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்ய வைத்துள்ளார்.

அத்துடன், மாணவரே விருப்பப்பட்டு இந்தத் தொகையைச் செலுத்துவதாக ரசீதில் எழுத வைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என புனே மாநகரப் போக்குவரத்துக் கழகம் (PMPML) தெரிவித்துள்ளது.

பயணிகளிடம் அபராதம் வசூலிப்பதற்கான உரிய நடைமுறைகளை ஊழியர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், விதிகளை மீறி அதிகத் தொகை வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

முந்தைய செய்தி ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் கெடுபிடி
அடுத்த செய்தி வெங்காய விலை உயர்வு : கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

அக்டோபர் 15, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்- விஜய்

ஜனவரி 25, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

ஜூலை 24, 2025
இந்தியா

ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை நாடிய விஜய்

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?