பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கள்ள காதலுக்காக பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தனது இரு பிள்ளைகளையும் கணவனையும் கொலை செய்ய முயற்சித்த வேளை கணவன் உயிர்தப்பிய நிலையில் 2 பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் கள்ள காதலனோடு தப்பி ஓட முயன்ற அபிராமியை
பொலிஸார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தாய் தண்டிக்கப்படவேண்டியவர் என நீதிபதி குறிப்பிட்ட அதேவேளை உடந்தையாக இருந்த அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன் போது இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பினை வழங்கியுள்ளார்.


