Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த வலியுறுத்தல்: அன்புமணி ராமதாஸ்

ஆகஸ்ட் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஐந்து கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்துத் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபநாட்களாக மதுரை, கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு போதைப்பொருள் புழக்கமும் மதுப் பயன்பாடுமே முதன்மை காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் பெரும் அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார.

தற்போதைய அரசு போதைப்பொருட்களை ஓரளவு கட்டுப்படுத்தியிருந்தாலும், இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், உடனடியாக இதை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தவறினால் சமூகம் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

மேலும், டாஸ்மாக் வருவாயைப் பெருக்குவதற்காக ஆன்லைன் புக்கிங் செயலி மற்றும் தனியாருக்கு விற்பனை அனுமதி போன்ற திட்டங்களை அரசு முன்னெடுப்பது சட்டம்-ஒழுங்கை மேலும் சீர்குலைக்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாலும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாலுமே பொதுமக்கள் த.வெ.க. தலைவர் விஜயை ஆதரித்து அவருக்கு வெற்றியைப் பரிசளித்தனர் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

எனவே, முதலமைச்சர் விஜய் தனக்குக் கீழ் இயங்கும் காவல் துறையை முடுக்கிவிட்டு, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் போதைப்பொருள் ஒழிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

முந்தைய செய்தி த.வெ.க. ஆட்சியின் 100 நாட்கள்: 546 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு
அடுத்த செய்தி பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் திடீர் மரணம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்(Video இணைப்பு )

ஆகஸ்ட் 11, 2025
இந்தியா

இந்தியாவின் செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை இரத்து!

ஜூலை 29, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் பயணமாக்கவுள்ளார்

பிப்ரவரி 24, 2026
இந்தியா

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தியசாலையில் அனுமதி!

ஜூலை 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?