Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியலில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கேமராவை அகற்றிய பொலிஸார்

ஆகஸ்ட் 14, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில், மக்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களை ரகசியமாகக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்புக் கேமரா குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே மொன்றியல் பொலிஸார் (SPVM) அதனை உடனடியாக அகற்றியுள்ளனர்.

பொதுமக்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்பியுள்ள இச்சம்பவம், மொன்றியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொன்றியலின் ரிவியேர்-டெஸ்-பிரேரீஸ் (Rivière-des-Prairies) பகுதியில் உள்ள ஹென்றி- பொராசா புலிவார்ட் வீதியின் விளக்குக் கம்பம் ஒன்றில், ரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த இந்தக் கண்காணிப்புக் கேமராவை உள்நாட்டு ஊடகம் ஒன்று அடையாளம் கண்டு செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குறித்த கேமராவை பொலிஸார் உடனடியாகக் கழற்றி அகற்றியுள்ளனர். அகற்றப்பட்ட சாதனம் மொன்றியலைச் சேர்ந்த ஜெனெடெக் (Genetec) தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கிளவுட்ரன்னர் CR-H2 (Cloudrunner CR-H2) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமரா மாடல் என மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கமான வாகன இலக்கத் தகடு வாசிப்பு சாதனங்களை (ALPR) விடவும் இது மிகவும் சக்திவாய்ந்தது என்று கூறப்படுகின்றது. மேலும், வாகனங்களின் இலக்கத் தகடுகளை மட்டுமன்றி, வாகனத்தின் நிறம், தயாரிப்பு நிறுவனம், ரகம், பயணிக்கும் வேகம் மற்றும் செல்லும் திசை என அனைத்து விபரங்களையும்
செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமாகச் சேகரித்துச் சேமிக்கும் திறன் படைத்ததாக இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமரா உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்த மொன்றியல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மார்க்-அன்டோயின் பெலாஞ்சர் (Marc-Antoine Bélanger), விசாரணை நடவடிக்கைக்காகவே இந்தக் கேமரா தற்காலிகமாகக் குத்தகை அடிப்படையில் பொருத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், விசாரணைகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காகவே கேமரா உடனடியாக அகற்றப்பட்டதாகவும், இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அந்த விசாரணை அதிகாரிகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் மொன்றியல் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இத்தகைய கண்காணிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்வெளிப்படைத்தன்மை இல்லை என மனித உரிமை அமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் (Ligue des droits et libertés) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டொமினிக் பெஷார்ட் (Dominique Peschard) கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்குத் தெரியாமல் செயற்கை நுண்ணறிவு மூலமான கண்காணிப்புகளை அதிகரிப்பது மக்களின் அடிப்படைத் தனியுரிமையை நேரடியாகப் பாதிக்கும்என எச்சரித்துள்ளார்.

முந்தைய செய்தி செயிண்ட் மிஷேல் பகுதியில் வன்முறைத் தாக்குதல் – இருவர் படுகாயம்
அடுத்த செய்தி செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் நகர சாலைகளை சீரமைக்க புதிய அவசரத் திட்டங்கள் அறிவிப்பு

மே 7, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியல் மாநகர தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஜனவரி 29, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சுதந்திரம் பெற்றால் வறுமையடையும் – பாப்லோ ரொட்ரிகஸ் எச்சரிக்கை

அக்டோபர் 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்ட்ரியலில் வேலைநிறுத்தத்தை அறிவித்தது பொதுப் போக்குவரத்து ஆணையம்

நவம்பர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?