Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

ஆகஸ்ட் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்
Cyclosporiasis outbreak as a foodborne parasitic illness caused by Cyclospora cayetanensis as an outbreak with contaminated food or water resulting in explosive diarrhea and digestive illness.
SHARE

கியூபெக் மாகாணத்தில் சைக்கிளோஸ்போரியாசிஸ்(Cyclosporiasis) என்ற குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் மிக வேகமாகப்
பரவி வருகின்றது.

தற்போதைய கோடைகாலத்தில், இம்மாதம் முதலாம் திகதி வரையிலான தரவுகளின்படி, கியூபெக் மாகாணத்தில் மொத்தம் 223 பேருக்கு இத்தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கியூபெக் சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 79 நோயாளர் பதிவுகளுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கும் அதிகமான உயர்வாகும். மேலும், கடந்த 2022 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில் பதிவான வருடாந்த சராசரி நோயாளர் பதிவுகளின் எண்ணிக்கையான 70-ஐ  விட, இது மிக அதிகம் ஆகும்.
சைக்கிளோஸ்போரா (Cyclospora) எனப்படும் நுண் ஒட்டுண்ணியால் மனித குடலில் ஏற்படும் இத்தொற்று, கடுமையான வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடியது.

மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகப் பரவாவிட்டாலும், இந்த ஒட்டுண்ணியால் மாசுபடுத்தப்பட்ட நீர், பழங்கள், காய்கறிகள் மற்றும் பச்சிலை மூலிகைகளை உண்பதன் மூலமே மனித உடலுக்குள் பரவுகிறது. தற்போது கியூபெக்கில் பதிவாகியுள்ள நோயாளர் பதிவுகளில் பெரும்பாலானவை, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான சர்வதேசப் பயணங்களைப் பின்னணியாகக் கொண்டவை என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், கியூபெக் மாகானத்திற்கு வெளியே இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாகவும் உள்ளூர் மக்களிடையே இத்தொற்று பரவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் இரு பொலிசர் படுகாயம்!
அடுத்த செய்தி பல மில்லியன் டொலர் கடன்: Goodfood நிறுவனத்திற்கு நீதிமன்ற பாதுகாப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வெளிநாடுகளில் வாழும் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கப்பட்ட கனேடியக் குடியுரிமைச் சான்றிதழ்கள் முடக்கப்பட்டது

ஜூன் 24, 2026
கனடாமுதன்மை செய்தி

காரணத்தை கூற மறுக்கும் கனடா வருவாய் முகவரகம்

அக்டோபர் 3, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் புதியதாகக் குடியேறினால், கலாசாரம் மற்றும் விழுமியங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற சட்டமூலம்…., நிறைவேற்றம்!

மே 29, 2025
கனடாமுதன்மை செய்தி

பாதுகாப்பாக மீட்கப்பட்ட மூன்று சுரங்க தொழிலாளர்கள்

ஜூலை 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?