கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அண்மையில் உள்ள மகாவலி ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை கண்ட அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன், இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதில் சடலமாக அடையாளங் காணப்பட்டவர் நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியை சேர்த்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சடலம் கம்பளை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




