Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சிறுமியை கர்ப்பமாக்கி சட்டவிரோத கருக்கலைப்பு: பிரான்ஸில் தலைமறைவானவருக்கு 30 ஆண்டு சிறை!

ஜூலை 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்படி சிறுமியின் கர்ப்பத்தை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தற்போது பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள நிலையில், குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது.

16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர், சிறுமி 06 மாத கர்ப்பமாக இருக்கும் போது, சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் குற்றவாளி இன்றி , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில் அந்நபரை குற்றவாளியாக கண்ட மன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குற்றவாளி தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்த மன்று , பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கும் குற்றவாளி தொடர்பில் அறிவிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.

முந்தைய செய்தி நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை
அடுத்த செய்தி மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

ஜூன் 27, 2026
இலங்கை

மொரகஹகந்த நீர்த்தேக்க பகுதியில் 715 தோட்டாக்கள் மீட்பு!

அக்டோபர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இயற்றப்படவுள்ள புதிய சட்டமூலம்

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சிசுவை கைவிட்ட பெற்றோருக்கு விளக்கமறியல்

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?