Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

ஜூலை 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

குடும்பத்தின் வருமானம் உயரும் போது பிள்ளைகளுக்கு திறமையான கல்வி வாய்ப்புகள் ஏற்படும். எனவே பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குடும்பங்கள் தமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை , மெலிஞ்சி முனை பகுதியை சேர்ந்த 118 குடும்பங்களுக்கு கடலட்டை பண்ணைகள் கையளிக்கப்பட்டன. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடலட்டை பண்ணைகளை வைத்திருப்போர் குழுக்களாக செயற்பட்டால் , பண்ணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ள முடியும்.

தொழில் , சாதி , மத ரீதியாக பிரிந்து விடாமல் ஒரு வலுவான சங்கம் ஒன்றினை கடலட்டை பண்ணையாளர்கள் உருவாக்க வேண்டும்.

சங்க உறுப்பினர்கள் அங்கத்துவ பணம் செலுத்தி , சங்கத்திற்கான வருமானத்தை பெருக்க வேண்டும். அதனூடாகவே , சங்க உறுப்பினர்களின் நல்லது கெட்டதற்கு , சங்கத்தின் ஊடாகவே நிதியுதவி செய்ய முடியும்.

எமது அரசாங்கத்தின் நோக்கமே வறுமையை ஒழிப்பது. அதனால் கிராம மட்ட பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றை தீர்க்கும் முகமான கலந்துரையடல்களை முன்னெடுத்து வருகின்றோம்

வறுமை அதிகமாக இருக்கும் இடங்களில் கல்வி பின்தங்கிய நிலைகளில் காணப்படுகிறது. கல்வி அறிவு குறையும் போது, அந்தப் பிரதேசங்களில் போதைப்பொருள் பயன்பாடு, வாள்வெட்டு , கள்ளக் கடத்தல் போன்ற கலாச்சாரச் சீரழிவுகள் அதிகரிக்கின்றன.எந்தவொரு பெற்றோரும் தன் பிள்ளை திருடனாகவோ அல்லது போதைக்கு அடிமையானவனாகவோ மாறுவதை விரும்புவதில்லை.

எமது அரசாங்கம் கல்விக்கு முன்னுரிமை வழங்கி, பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனைகளைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

அதேவேளை குடும்பங்களில் வறுமைகள் நீங்கும் போது பிள்ளைகளுக்கும் நல்ல கல்வி கிடைக்கும். அதனூடாக கல்வி வளர்ச்சி ஏற்பட்டு , கிராமங்கள் அபிவிருத்தி அடையும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு
அடுத்த செய்தி வவுனியாவில் கோர விபத்து – பொலிஸ் சாஜன் பரிதாபமாக பலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – மக்கள் அவதானம்

ஜனவரி 9, 2026
இலங்கை

வெலிகம லசந்த கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மை!

அக்டோபர் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு

பிப்ரவரி 8, 2026
இலங்கை

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ‘ ஊராட்சி முற்றம்’ மகளிர் குரல் கூட்டம்!

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?