இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் சார்பில் த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சி.வேந்தன் மற்றும் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது சமகால அரசியல் நிலவரம் சிறுபான்மை கட்சிகள் இணைந்து உருவாக்கிய புதிய கூட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் ,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

