Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

நூரன் ரெஸாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

ஜூலை 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் – லோன்குயில் (Longueuil) பகுதியில் கடந்த ஆண்டு 15 வயதுடைய நூரன் ரெஸாயி (Nooran Rezayi) என்ற சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் தொடர்பாக 11 இளைஞர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆயுதமேந்திய இளைஞர் குழு ஒன்று பொது இடத்தில் நடமாடுவதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று கிடைத்த அவசர அழைப்பையடுத்து, லோன்குயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்ட வெறும் 10 வினாடிகளுக்குள், நிராயுதபாணியாக நின்ற 15 வயது சிறுவன் நூரன் ரெஸாயி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்தத் துப்பாக்கிச்சூடு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு அரங்கேறிய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாக, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 நபர்ர்கள் மீது, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 6 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை (Summons) விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கியூபெக்கின் இளம்பருவத்தினருக்கான நீதிமன்றத்தில் (Youth Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மொண்ட்ரியல் காவல்துறை ஆய்வாளர் டேவிட் ஷேன் (David Shane) செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் இளம் வாலிபர்கள் என்றும் 7 பேர் பதின்ம வயதுச் சிறுவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 100க்கும் மேற்பட்ட மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரிகள், தெற்குச் கரை (South Shore) பகுதியின் 5 நகராட்சிகளில் நடத்திய சோதனைகளின் விளைவாகவே ஆதாரங்கள் திரட்டப்பட்டு, தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

ஏப்ரல் 10, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் பாரிய வீழ்ச்சி!

ஆகஸ்ட் 31, 2025
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
கியூபெக்விசேட செய்திகள்

கியூபெக் மாகாணத்தின் ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோட்டம்!

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?