கியூபெக் மாகாணத்தில் மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், தம்மைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரியின் வாகனத்தை, வேண்டுமென்றே தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
இந்த மோதலில் கனேடியப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எனினும், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய 25 வயதுடைய கடத்தல்காரனை காவல்துறையினர் துரத்திப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், எல்லை தாண்டி சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த ஐந்து நபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கியூபெக் மாகாண எல்லைக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த சட்டவிரோத மனிதக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
