அதிகரித்து வரும் யூத எதிர்ப்பு (Antisemitism) வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை தாங்குவதற்காக மொன்றியல் (Montreal) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மார்க் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்க் மில்லரை (Marc Miller) இப்பதவியில் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நியமித்துள்ளார்.
நாட்டில் யூத மக்களுக்கு எதிரான வெறுப்புச் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளதாக எச்சரித்துள்ள பிரதமர், யூத கனடியர்களைப் பாதுகாப்பதில் நாடு தவறிவிட்டதாகக் குறிப்பிட்டு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பதியப்பட்ட சமயம் சார்ந்த வெறுப்புக் குற்றங்களில் (Hate Crimes) சுமார் 70 சதவீதமானவை யூத சமூகத்தினரைக் குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.
அண்மைக் காலங்களில் யூதப் பள்ளிகளை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, வழிபாட்டுத் தலங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டமை மற்றும் யூதர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் சிதைக்கப்பட்டமை போன்ற தீவிர வன்முறைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையிலேயே, யூத எதிர்ப்பு (Antisemitism) வெறுப்புப் பேச்சுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் ஆலோசனைக் குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
