பாலஸ்தீன அரசு உருவாகாமல் இஸ்ரேல் அரசு தடுத்து வருவதாக, பிரதமர் மார்க் கார்னி குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பேசும்போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் திருடிவிட்டதாகவும் பிரதமர் மார்க் கார்னி விமர்சித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க கனடா முழுமையாக உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.
தற்போது உலகம் ஒரு “மாற்றத்தில்” இருக்கவில்லை எனவும், மாறாக ஒரு “உடைபடுதலில்” (rupture) இருப்பதாகவும் மார்க் கார்னி கூறியுள்ளார்.
இந்த கடுமையான மாற்றங்களைச் சந்திக்க கனடா தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
