கியூபெக் மாகாணத்தில் வாடகை வீடுகளில் வசிப்போரின் உரிமைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய வீட்டுவசதிச் சட்டம் உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
Bill 31 என்று அழைக்கப்படும் இந்த புதிய வீட்டுவசதிச் சட்டம், குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டின் குத்தகையை (Lease) வேறொருவருக்கு மாற்றும் உரிமையைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது.
அத்துடன், மறுபுறம் முறையற்ற வகையில் வாடகைதாரர்களை வெளியேற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாரிய நிதி அபராதங்களையும் இச்சட்டம் விதிக்கிறது.
கியூபெக்கின் முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோவின் முன்னைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்திருத்தம், மாகாணத்தின் சிவில் சட்டக்கோவையில் (Civil Code) பல மாற்றங்களைச் செய்துள்ளது.
மொன்றியல் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலவும் கடுமையான வீட்டுவசதி நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அரசாங்கம் கூறினாலும், இது வீட்டு உரிமையாளர்களுக்குச் சாதகமானது என வாடகைக்குடியிருப்பாளர் நலன்புரி அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
