Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

52 வயது நபர் மீது புதிய பயங்கரவாத வழக்குகள் பதிவு

ஜனவரி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் நகரங்களில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, அல்-கொய்தா
அமைப்புடன் தொடர்புடைய 52 வயது நபர் மீது, புதிய பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முகமது அப்துல்லா வார்சமே (Mohamed Abdullah Warsame) என்ற இந்த நபர், ஏற்கனவே சிறையில் இருந்தபோது கடந்த நவம்பர் மாதம் இந்த மிரட்டல்களை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

சோமாலியாவில் பிறந்து கனடா குடியுரிமை பெற்ற இவர், 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அல்-கொய்தா அமைப்பிற்கு ஆதரவாகச்
செயல்பட்டதை ஒப்புக்கொண்டு சிறை தண்டனை பெற்றவர்.

பின்னர் 2010-ஆம் ஆண்டில் கனடாவிற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். மொண்ட்ரியலில் உள்ள ஒரு தங்குமிடத்தில் கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்து அமைப்பில் குண்டு வைக்கவுள்ளதாக மிரட்டியதற்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவரது பழைய குற்றப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இவர் மீது மிகக் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான அந்த சந்தேக நபரின் வழக்கறிஞர் லியோனார்ட் வாக்ஸ்மேன், தனது கட்சிக்காரருக்கும் தற்போதைய பயங்கரவாத அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.

சந்தேக நபரான வார்சமே நீண்ட காலமாக வீடற்ற நிலையில் வசித்து வருவதாகவும், அவருக்கு ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) எனப்படும் தீவிர மனநலப் பாதிப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 9-ஆம் திகதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது. அதுவரை வார்சமே தொடர்ந்து சிறைக் காவலில் வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக்கில் வீடுகளைப் புதுப்பிப்பதற்கான (Renovation) செலவுகள் அதிகரிப்பு
அடுத்த செய்தி யாழில். சொகுசு வீட்டில் தவறான தொழில்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் நுனாவிக்கில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் பாதிப்பு

நவம்பர் 24, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வடக்கு கடற்கரையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஜூன் 21, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கின் பொருளாதார வளங்களை பயன்படுத்த விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்!

மார்ச் 11, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் சுதந்திரம் பெற்றால் வறுமையடையும் – பாப்லோ ரொட்ரிகஸ் எச்சரிக்கை

அக்டோபர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?