மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மில்டன்-பார்க் (Milton-Park) பகுதி, அங்குள்ள ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பு மற்றும் மருத்துவச் சேவை முறையின் வீழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு ஆபத்தான அடையாளமாக மாறியுள்ளது.
இப்பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தங்களை மீட்டெடுக்க மறுவாழ்வு மையங்களில் (Rehab Centres) அனுமதி பெறுவதற்காகப் பல மாதங்கள் காத்திருக்கும் அவல நிலை நீடித்து வருகின்றது. அதேவேளை, அங்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ‘ஃபெண்டானில்’ (Fentanyl) போன்ற மிகக் கொடிய போதைப்பொருட்களைப் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கி, அவர்களை நிரந்தர அடிமைகளாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
அரசின் போதிய திட்டமிடல் இன்மை மற்றும் மருத்துவக் கட்டமைப்புச் சீர்குலைவு காரணமாகவே இப்பகுதியில் போதைப்பொருள் புழக்கமும் குற்றச்செயல்களும் தீவிரமடைந்துள்ளதாக, சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
மில்டன்-பார்க் பிராந்தியத்தில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், அதிலிருந்து மக்களை மீட்பதற்குமான, அரசாங்கத்தின் மருத்துவக் கட்டமைப்பு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது.
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் ஒரு நபர், அரசு அல்லது தொண்டு நிறுவனங்களின் போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்களில் சேருவதற்குப் பல வாரங்கள் முதல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
