கெக்கிராவ கிரிமெட்டியாவ குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் 28 வயதுடையவர் என்பதுடன் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
