Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

செயிண்ட் கத்தரீன் பகுதி வணிகர்கள் மொன்றியல் மாநகர சபையிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஏப்ரல் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலின் மிகமுக்கிய வணிக வீதியான செயிண்ட் கத்தரீன் (Ste- Catherine) தெருவில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை, இரவு பகலாக 24 மணிநேரமும் முன்னெடுத்து விரைவில் முடிக்க வேண்டும் என அந்தப் பகுதி வணிகர்கள் மொன்றியலின் மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பாரிய உள்கட்டமைப்புத் திட்டத்தினால் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தத் திட்டம் 2029-ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தெருவைச் சீரமைக்க இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்வது நகரத்தின் பொருளாதாரத்தைக் கொலை செய்வதற்குச் சமம் என மொன்றியலின் வணிகர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சுமார் 418 மில்லியன் டொலர் செலவில் நடைபெறும் இந்தத் திட்டத்தில், பழைய குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, நடைபாதைகள் விரிவாக்கப்படுகின்றன.

இதற்காக வீதிகள் தோண்டப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் குறைந்து பல கடைகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் தமக்கு ஆண்டுக்கு 40,000 டொலர்கள் வரை நட்டஈடு வழங்கினாலும், அது தங்களுக்கு ஏற்படும் லட்சக்கணக்கான டொலர் இழப்பிற்கு ஈடாகாது என வணிகர்கள் கூறுகின்றனர்.

மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெராடா (Soraya Martinez Ferrada), ஏற்கனவே இந்தத் திட்டத்தை ஓராண்டு முன்னதாக முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக மேலதிகமாக 7 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மொன்றியல் கூடைப்பந்து பயிற்சியார்
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மொண்ட்ரியலில்14 பெண் மாணவர்களின் நினைவாக வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டம்!

டிசம்பர் 2, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழிக்கு முன்னிலை – Bill 96 இன் கீழ் புதிய கடும் விதிகள்!

மார்ச் 4, 2026
கியூபெக்

Bill 3 மசோதாவுக்கு எதிராக, கியூபெக்கில் உள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு!

நவம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாணத்திலிருந்து கனேடிய மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை!

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?