நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக மறைந்த குரு மகா சந்நிதானத்தின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
மேலும் குரு மகா சந்நிதானத்தின் நினைவைப் போற்றும் வகையிலான ‘சிறப்பு மலர்’ உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
