கனடா போஸ்ட் நிறுவனம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தபால் வழங்கும் முறையை (Door-to-door delivery) அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
தனது பாரிய கடன் சுமையைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை கனடா போஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, இந்த ஆண்டின் இறுதியில் 1,36,000 முகவரிகளுக்கான நேரடி விநியோகம் நிறுத்தப்பட்டு, பொதுவான தபால் பெட்டி (Community Mailbox) முறை நடைமுறைக்கு வரவுள்ளது.
சுமார் 40 இலட்சம் வீடுகளைப் பாதிக்கும் இந்தத் திட்டம், தபால் துறைக்கு ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் டொலர்களைச் சேமித்துத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டாவா, வின்னிபெக், டொராண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) மற்றும் வான்கூவர் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் இந்தப் பணி முதலில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று விநியோகம் செய்வதற்கு இருமடங்கு செலவு ஏற்படுவதால், இந்தச் சிக்கன நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
