Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

சமூகவிரோதக் கும்பலொன்றின் முயற்சியை முறியடித்த மொன்றியல் பொலிஸார்

ஏப்ரல் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெறுமதிமிக்க சொகுசு வாகனங்களைத் திருடி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த சமூகவிரோதக் கும்பலொன்றின் முயற்சியை மொன்றியல் பொலிஸார் (SPVM) முறியடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேரை மொன்றியல் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, மொன்றியலின் பல்வேறு பகுதிகளிலும், ரிபென்டிக்னி (Repentigny) போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் பொலிஸார் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.

இந்தச் சோதனையின் போது, திருடப்பட்ட 10 வாகனங்கள், போலி இலக்கத் தகடுகள் மற்றும் வாகனங்களைத் திருடப் பயன்படுத்தப்படும் நவீன இலத்திரனியல் கருவிகள் முதலானவை கைப்பற்றப்பட்டன. கியூபெக் மாகாணப் பொலிஸார் (SQ) மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) ஆகியவற்றுடன் இணைந்தே, இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டது.

இந்த சமூகவிரோதக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஒரு வாகனத்தைத் திருடியதும், அதில் ஜி.பி.எஸ். (GPS) கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, அந்த வாகனத்தைச் சில மணிநேரங்கள் ஒரு பொது இடத்தில் நிறுத்தி வைப்பார்கள் எனவும் யாரும் தேடி வராத பட்சத்தில், அந்த வாகனத்தைக் கொள்கலன்களில் (Containers) ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் எவ்வளவு நவீனமாகச் செயல்பட்டாலும், எமது பாதுகாப்புப்படையினர் அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனப் பொலிஸ் கமாண்டர் பியர்-மார்க் ஹூல் தெரிவித்துள்ளார். மொன்றியலில் அதிகரித்து வரும் வாகனத் திருட்டுகளைக் கட்டுப்படுத்த இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி நாட்டில் உயர் வெப்பநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்த செய்தி மொன்றியல் நகர வெப்பநிலையில் திடீர் மாற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மனநல நோயாளிகள் கட்டாய அனுமதி விதிகளில் தளர்வு – கியூபெக் அரசின் புதிய சட்டமூலம் தாக்கல்!

மார்ச் 25, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் கடும் பனிமழை எச்சரிக்கை – பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மார்ச் 11, 2026
கியூபெக்முதன்மை செய்தி

சிறுவனை சுட்டு கொன்ற பொலிஸார்” விசாரணை ஆரம்பம்!

டிசம்பர் 12, 2025
கியூபெக்

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மொன்றியல் மாநகரசபை ஊழியர்கள்

மார்ச் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?