மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தில் (SPVM) பணியாற்றும் ஒரு உயர்நிலை பெண் அதிகாரிக்கு எதிராகச் சக ஆண் அதிகாரிகள் மேற்கொண்ட இழிவான மற்றும் பெண் வெறுப்பு (Misogyny) சார்ந்த நடத்தைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) மற்றும் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொது நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான இத்தகைய இழிவான நடத்தைகளைச் சகித்துக்கொள்ள முடியாது எனவும் இது மொன்றியல் நகரின் விழுமியங்களுக்கு எதிரானது எனவும் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா குறிப்பிட்டுள்ளார்.
பெண்களை மதிக்கத் தெரியாத அதிகாரிகள் தமது படையில் இருக்கத் தகுதியற்றவர்கள் எனவும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் ஃபாடி தாகர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் தற்போது சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுப்பில் (Suspension) வைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் இவர்களுக்கான இறுதி ஒழுக்காற்று விசாரணை நடைபெறவுள்ளது.
