தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உறுதிபடத்
தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்த பின்னரே அவர் இக்கருத்தை வெளிப்படுத்தினார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஐந்து கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே தங்களின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 234 தொகுதிகளில், திமுக 164 இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதேவேளை, தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பகல் கனவு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியே 210 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று, அவர் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செயற்பாடு ஏப்ரல் 6-ஆம்
திகதி வரை நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் ஈரோடு மாவட்டத்தில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் ம் ஆதம் 23-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே மாதம் 4-ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
