Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இந்தியா

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்போம்-மு.க. ஸ்டாலின்!

மார்ச் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று உறுதிபடத்
தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், கொளத்தூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்த பின்னரே அவர் இக்கருத்தை வெளிப்படுத்தினார். வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த ஐந்து கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே தங்களின் வெற்றிக்குக் கட்டியம் கூறும் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 234 தொகுதிகளில், திமுக 164  இடங்களில் நேரடியாகப் போட்டியிடுகிறது.அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதேவேளை, தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை  பகல் கனவு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியே 210 இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று, அவர் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செயற்பாடு ஏப்ரல் 6-ஆம்
திகதி வரை நடைபெறவுள்ளது. ஏப்ரல் 2-ஆம் திகதி முதல் ஈரோடு மாவட்டத்தில் தனது முதற்கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் புயல் வேகப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் ம் ஆதம் 23-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே மாதம் 4-ஆம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக, இந்தியத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!
அடுத்த செய்தி மொன்றியல் பொலிஸ் திணைக்கள உயர்நிலை பெண் அதிகாரியை இழிவுப்படுத்திய ஆண் அதிகாரிகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல்

செப்டம்பர் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ் தேசிய பேரவையினர்

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வத்தேகமயில் பஸ் விபத்து!

ஜூலை 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?