வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், துணுக்காய் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கலைஞர் ஒன்றுகூடல் நிகழ்வு 27.03.2026 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் துணுக்காய் பிரதேச செயலக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கலாசார உத்தியோகத்தர் திருமதி ஆ. நிஷாந்தினி அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், துணுக்காய் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், மேலும் பல பிரதேச கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் மூலம் துணுக்காய் பிரதேச கலைஞர்களின் திறமைகள் மற்றும் ஆளுமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நாடகம், பாடல், தனிநடிப்பு, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கைத் திருநாட்டின் அதிஉயர் விருதான “தேசிய கலாபூஷணம்” விருதைப் பெற்ற மூத்த கலைஞர் திரு. சிற்றம்பலம் சண்முகதாதன் அவர்களுக்கு துணுக்காய் பிரதேச செயலகம் சார்பில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன், இந்நிகழ்வில் தமது கலை ஆற்றுகைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
