முன்னாள் போராளிகள் சிலருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைகளுக்குமிடையிலான கலந்துரையாடல் என்ற தொனிப்பொருளில் முன்னாள் போராளிகள் சிலரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன். சு.சுகிர்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உரையாற்றிருந்தார்.
மேலும் கருத்துரைத்த சி.வீ.கே.சிவஞானம்,
ஒற்றுமையின்மை காலைவாருதல் போன்ற காரணங்களால் பிரிந்து நிற்கின்றோம் .தோல்விகளை சந்தித்திருந்தாலும் அதிலிருந்து சுதாகரித்து கொண்டு முன்னேக்கி செல்லும் ஒரு கட்சியாக காணப்படுகின்றது. முரண்பாடு கருத்து வேறுபாடு இருக்கின்றது.
தமிழ் இனத்தின் வரலாற்றுரீதியான 75வருடம் உயிர்ப்போடு இருக்கின்ற கட்சி தமிழரசுக்கட்சி அனைவரையும் உயிர்ப்போடு வரவேற்கின்றது. சிலர் நினைக்கின்றார்கள் தமிழரசுக் கட்சியயை வெருட்டலாம் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பாக செயற்படுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகையில்,
இலங்கை தமிழரசுக்கட்சி 77வது ஆண்டில் பயணமாகின்றது. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சுயநிர்ண உரித்து உடையவர்கள் என்பதன் அடிப்படையில் ஆரம்பித்த கட்சி. ஜனாதிபதியை இறுதியாக சந்தித்து பேசும் போது மீளப்பெறமுடியாத ஆட்சி அதிகாரங்களை வடக்கு, கிழக்கில் சமஸ்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என கட்சியில் பதில் தலைவர் தெரிவித்திருந்தார்.
