Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் மாயம்.

ஆகஸ்ட் 1, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதியதில் மீன்பிடி விசைப் படகு நடுக்கடலில் மூழ்கியதில் படகில் இருந்த நான்கு மீனவர்கள் மாயமானதால் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 397 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்று நேற்று நள்ளிரவு விசைப்படகுகள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படை ரோந்து படகுகள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததால் கைது செய்யப்படும் என ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் என்பவரின் விசைப் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி மீன் பிடி படகு நடுக்கடலில் மீனவர்களுடன் மூழ்கியதாக சொல்லப்படுகிறது.

இதில் படகில் இருந்த மூக்கையா, முனியசாமி, ராமச்சந்திரன், முத்து முனியாண்டி ஆகிய நான்கு மீனவர்கள் மாயமாகினர். மேலும் நான்கு மீனவர்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்காததால் அச்சமடைந்த படகின் உரிமையாளர் கார்த்திகேயன் மாயமான மீனவர்களையும் படகையும் கண்டுபிடித்து தருமாறு ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீன் பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் நான்கு மீனவர்கள் மாயமான நிகழ்வு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி கமலா ஹாரிஸ் பேசியதைப் போன்று தயாரிக்கப்பட்ட போலி வீடியோவை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த செய்தி இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் குடும்பத்தினர் தற்போது சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது

பிப்ரவரி 2, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கனிய வளங்களை பாதுகாக்கும் – டானியல் வசந்தன்.

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 ஏப்ரல் 2026

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெலிக்கடை படுகொலைக்கு நீதி வேண்டும் – எம்.பி செல்வம் ஆவேசம்!

ஜூலை 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?