தஞ்சம் கோரியுள்ள அகதி குடும்பங்களை வலுக்கட்டாயமாகப் பிரிக்கும் புதிய நடைமுறையை எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA) கையாண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையும் அவரது ஐந்து வயது மகனையும் நாடுகடத்த அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு, சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி சவுகான் (Ravi Chauhan) என்பவரது மனைவிக்குக் கனடாவில் அகதி அந்தஸ்து (Protected Status) வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரவி மற்றும் அவரது சிறு மகனுக்கு அந்த அந்தஸ்து இன்னும் கிடைக்காத நிலையில், அவர்கள் இருவரும் வரும் திங்கட்கிழமை நாடுகடத்தப்பட உள்ளனர்.
இதனால், கனடாவில் தஞ்சம் புகுந்துள்ள தாயிடமிருந்து அவரது கணவரும் குழந்தையும் பிரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
வழக்கமாக, குடும்பத்தில் ஒருவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்துவிட்டால், மற்ற உறுப்பினர்களின் வதிவிட விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் வரை அவர்கள் கனடாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, மிக வேகமாகவும் இரக்கமின்றியும் நாடுகடத்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கியூபெக் மாகாணத்தில் நிரந்தர வதிவிட அனுமதி (PR) கிடைக்கச் சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
