மொன்றியல் மாநகரத்தின் பொதுப் போக்குவரத்துச் சேவையான ‘STM’, மாகாண அரசுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சிதைந்து வரும் தனது உட்கட்டமைப்புகளைச் சீரமைக்க உடனடியாக 560 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படாவிட்டால், மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள் எந்நேரமும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
STM நிறுவனத்தின் அண்மைக்கால அறிக்கையின்படி, மொத்தப் போக்குவரத்து கட்டமைப்பில் சுமார் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
பேருந்துகளைப் பராமரிக்கும் நிலையங்களின் கூரைகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் உடனடியாக மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளன.
பல தசாப்தங்களாக போதிய பராமரிப்பு நிதி ஒதுக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த 560 மில்லியன் டொலர் நிதி கிடைக்காவிட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காகச் சில மெட்ரோ நிலைய வாசல்களை மூட வேண்டியிருக்கும் அல்லது ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கியூபெக் மாகாண பட்ஜெட்டில், போக்குவரத்துத் துறைக்குத் தேவையான முழுமையான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
