கியூபெக் மாகாணத்தில் இன்று வீசிய அதிவேகச் சூறாவளிக் காற்றினால் சுமார் 3,15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், மாகாணத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
‘ஹைட்ரோ-கியூபெக்’ (Hydro-Québec) நிறுவனத்தின் தகவல்படி, லாரன்ஷியன்ஸ், லானாடியர் மற்றும் மொன்டரேஜி ஆகிய பகுதிகள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
மாகாணம் முழுவதும் சுமார் 1,400 இடங்களில் சேதங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றைச் சீரமைக்க 1,100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
