கியூபெக் மாகாணத்தில் இந்த வாரம் வழக்கத்திற்கு மாறான காலநிலை மாற்றம் ஏற்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (ECCC) இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாதத் தொடக்கத்தில் நிலவிய கடும் குளிருக்கு மத்தியில், தற்போது வெப்பநிலை திடீரென உயர்ந்து வருவது கியூபெக் மாகாணத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்த வாரம் கியூபெக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொண்ட்ரியல் நகரம் மற்றும் தெற்கு கியூபெக் பகுதிகளில், இந்த வார இறுதியில் வெப்பநிலை 11°C வரை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகுவதும், அதனுடன் பெய்யும் கனமழையும் இணைந்து கியூபெக் மாகாண ஆறுகளில் நீர்மட்டத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
