நாட்டில் இந்தியா முன்னெடுத்து வந்ததாகக் கூறப்பட்ட வன்முறைச் செயல்கள் மற்றும் மிரட்டல்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இன்று இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்குப் போட்டியாக, இந்தியாவுடன் 7,000 கோடி டொலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள பிரதமர் கார்னி திட்டமிட்டுள்ளார்.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகளே இந்த நம்பிக்கைக்குக் காரணம் என அரசு கூறுகிறது.
இதேவேளை, மத்திய அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டாலும், கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகள் இதனைக் கடுமையாக மறுத்துள்ளன.
கியூபெக் மற்றும் ஒன்டாரியோ மாகாணங்களில் இயங்கும் சீக்கிய அமைப்புகள், “வர்த்தகத்திற்காக மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு அடகு வைக்கிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளன.
