கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு (Referendum), அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வர்த்தக அச்சுறுத்தல்கள் காரணமாகத்
தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ‘பார்ட்டி கியூபெக்வா’ (PQ) கட்சித் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் தெரிவித்துள்ளார்.
சிக்கூட்டிமி (Chicoutimi) தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவர் ஆற்றிய உரை, மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய பிரசாரத்தின் போது தாம் சந்தித்த மக்கள் பலர், அமெரிக்க அதிபரினால் கியூபெக் மாகாணத்தின் மரம் மற்றும் அலுமினியத் தொழில்துறைக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுவதாக, பிளாமண்டன் குறிப்பிட்டார்.
“மக்கள் உண்மையிலேயே பயப்படுகிறார்கள், அவர்கள் கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று அவர் கூறினார்.
கியூபெக் மாகாணத்தின் சட்டமன்றத்திற்கான அடுத்த தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் அல்லது சாதகமான சூழல் ஏற்படும் வரை காத்திருப்போம் என பிளாமண்டன் தெரிவித்துள்ளார்.
