பழைய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் புதிய பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம். பயங்கரவாத தடைச்சட்டமே தேவையில்லை என வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
