வடக்குப்பகுதியில் வாழும் இன்யூட் (Inuit) பழங்குடி மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 228 மில்லியன் டொலர் மதிப்பிலான பாரிய நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அந்நாட்டின் பூர்வீகக்குடி விவகாரங்களுக்கான அமைச்சர் மேண்டி குல்-மாஸ்டி வெளியிட்டுள்ளார். இந்த நிதியுதவியின் ஒரு முக்கியப் பகுதியாக, 50 மில்லியன் டொலர் செலவில் கனடாவின் முதல் இன்யூட் மக்களால் வழிநடத்தப்படும் பல்கலைக்கழகம்(Inuit-led University) நுனாவட்டில் உள்ள அர்வியாட் (Arviat) பகுதியில் அமையவுள்ளது.
2030-ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ள இப்பல்கலைக்கழகம், இன்யூட் மொழிகளைப் பாதுகாப்பதற்கும், அப்பகுதி இளைஞர்களுக்குப் பொருளாதார ரீதியான உயர் கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கும்.
பல்கலைக்கழகம் அமைப்பதைத் தவிரவும், வடக்கத்திய மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவும் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
