நாடாளுமன்றில் இன்றையதினம் கூடிய வேளையில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல உரையாற்றினார் .
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
வாகன அனுமதி பாத்திரங்களை தாம் பெற்றுக் கொண்டாலும் அவற்றை நாங்கள் ஒருபோதும் விற்கவில்லை என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
“அமைச்சர் ஒருவரின் தாயாரின் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்ததாக இங்கு முன்மொழியப்பட்ட யோசனையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார்.அது ஹோமாகமவில் உள்ள கணக்கு எனக் கூறப்பட்டது. அதைக் கூறிவிட்டு அவர் ஓடிவிட்டார்.
அதன் பின்னர், எமது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் அனுமதிப்பத்திரங்களை பெற்றுள்ளனர் என ஒரு சவாலை முன்வைப்பது போல இங்கு கொண்டு வந்தார்கள். நாம் அவற்றைப் பெறவில்லை என்று கூறவில்லையே. நாம் பெற்றிருக்கின்றோம். ஆனால், உங்களைப் போல நாம் ஒரு அனுமதிப்பத்திரத்தைக் கூட விற்கவில்லை. சரிதானே? நாம் ஒரு அனுமதிப்பத்திரத்தையும் விற்கவில்லை.
