நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 100,000 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி 1973 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தடுப்பு உத்தரவுகளை பெற்றுள்ளனர்.
மறுவாழ்வுக்காக 1639 பேர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பில் 1416 கிலோகிராம் 41 கிராம் ஐஸ், 524 கிலோகிராம் 906 கிராம் ஹெரோயின், 11 கிலோகிராம் 674 கிராம் கஞ்சா, 199 கிலோகிராம் 864 கிராம் குஷ், 121 கிலோகிராம் 962 கிராம் ஹஷிஷ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
