நாட்டில் லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 30,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு கட்டுப்பாடு காரணமாகவே இந்தத் தற்காலிக விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் எரிவாயு கப்பல்களை நேரடியாக கொழும்பு துறைமுகத்துக்கு திசைதிருப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எங்களின் கையிருப்பில் எரிவாயு இருப்பது உறுதி செய்த பின்னர் சந்தைக்குத் தடையின்றி எரிவாயுவை விநியோகிப்பதற்கான பொறிமுறைகள் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் மக்களுக்கு விரைவில் எரிவாயு கிடைக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
