பாலியல் குற்றங்களுக்காக ‘ஆபத்தான குற்றவாளி’ என அடையாளப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு திருநங்கை கைதியை, பெண்கள் சிறைக்கு மாற்றக் கோரும் வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
58 வயதான அமண்டா ஜாய் கூப்பர் (Amanda Joy Cooper) என்ற திருநங்கை கைதி தொடர்பாகவே, இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆண்களுக்கான பாதுகாப்பு மிகுந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பல பெண்களுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் முழுமையான பாலின மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொண்டார்.
2022-ஆம் ஆண்டு விதிகளின்படி, ஒருவரின் பிறப்புறுப்பு அமைப்பை வைத்தே சிறை ஒதுக்கப்பட வேண்டும் என்னும் நிலை காணப்படுகின்றது.
அமண்டா இப்போது உடல் ரீதியாக ஒரு பெண் என்பதால் அவர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட வேண்டும் என, அமண்டாவின் வழக்கறிஞர் ஜெசிகா ரோஸ் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்துள்ளார்.
ஆண்கள் சிறையில் அமண்டா சக கைதிகளால் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு அவருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் அமண்டாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
